states

img

புதிய அரசு அமையும் முன்னரே 5 நியமன எம்எல்ஏக்கள் ஜம்மு-காஷ்மீரில் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டம்

ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்ற தேர்தல் தொ டர்பாக “இண்டியா டுடே சி-வோட்டர்” உள்ளிட்ட சில கருத்துக்கணிப்பு முடி வுகளில் “இந்தியா” கூட்டணி 40 முதல் 48 தொகுதிகளி லும், பாஜக 22 முதல் 32 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 6 முதல் 12 தொகுதிகளை கைப் பற்றும் என்றும், பெரும்பான் மைக்கு தேவையான 48 இடங்களை வெல்லாமல் தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீரில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டி யுள்ளது. அதாவது துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா 5 எம்எல்ஏக்களை நியமனம் செய்ய உத்தர விட்டுள்ளார். வாக்கு எண் ணிக்கைக்குப் பிறகு தொங்கு சட்டமன்றம் அமைந்தால் 5 நியமன எம் எல்ஏக்களையும் பாஜகவு க்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியை உடைத்தும் ஆட்சியை கைப் பற்ற அரசியல் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது பாஜக.

அரசியலமைப்பின் மீதான தாக்குதல்

“புதிய அரசு அமைப்ப தற்கு முன் 5 எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் நிய மனம் செய்வதை எதிர்க்கி றோம். இதுபோன்ற நடவ டிக்கை ஜனநாயகம், மக்கள் தீர்ப்பு மற்றும் அரசியல மைப்பின் மீதான தாக்குத லாக கருதுகிறோம்” என காங்கிரஸ் ஜம்மு–காஷ்மீர் துணைத் தலைவர் ரவீந்தர் சர்மா கூறினார். 

கடந்த 2017இல் புதுச் சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, அப் போதைய ஆளுங்கட்சி யான காங்கிரசுடன் கலந்தா லோசிக்காமல் 2 எம்எல் ஏக்களை நியமித்தார். அதே போல புதிய அரசு அமையும் முன்னரே 5 எம்எல்ஏக்கள் நியமிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது பாஜக.